Nov 25, 2008

'ம்..'

ஒரு நிலவை போல்தான்
நானும் என் காத்திருப்புகளும்..
தினம் தனிமையில்.
அந்த அலையை போல்தான்
நானும் என் நினைவுகளும்..
ஓயாமல் உன்னைத்தேடி.

காற்றாய் மாறிவிடுகிறேன்
உன் சுவாசம் மட்டும் வாழ..
ஒரு பூவாய் மாறிவிடுகிறேன்
உன் கூந்தல் மட்டும் வாழ..
கொடுத்தது இதயம்தான்
கொண்டது எதுவென தெரியவில்லை..
இழந்தது நிம்மதிதான்
இனி இருப்பது எது புரியவில்லை..
கண்கள் பார்த்தது சில நாட்கள்
காதல் சொன்னது சில நாட்கள்..
கானலாய் கொதிக்கும்
பிரிவோ இன்றுவரை..
தயக்கங்களில் மூழ்கி
சுயங்கள் தொலைத்து பின்
இனி சந்திப்பே வேண்டாம்
என நானும்..
தனிமைகளின் தவிப்புகளில்
மயக்கங்களின் இறுக்கத்தில் சிக்கி
சந்திக்க வேண்டும் என நீயும்..
கண்ணில்லா இறைவன்
ஜன சந்தடி மிக்க ஏதேனும்
ஒரு சாலையோரத்தில்
சந்திக்கவைத்துவிடுகிறான்..
'நல்லாருக்கியா..' என நீ கேட்கவும்..
'ம்..' என்ற ஒற்றை வார்த்தையில்
நான் பொய் சொல்லவும்.
.............................................................................
ப் ரி ய மு ட ன் . . லோ க நா த ன். .

9 comments:

gayathri said...

ஒரு நிலவை போல்தான்

நானும் என் காத்திருப்புகளும்..
தினம் தனிமையில்.
அந்த அலையை போல்தான்
நானும் என் நினைவுகளும்..

ஓயாமல் உன்னைத்தேடி

neenga thedupavar kedikum vari ungal thedal thodarattum

gayathri said...

தயக்கங்களில் மூழ்கி
சுயங்கள் தொலைத்து பின்
இனி சந்திப்பே வேண்டாம்
என நானும்..
தனிமைகளின் தவிப்புகளில்
மயக்கங்களின் இறுக்கத்தில் சிக்கி
சந்திக்க வேண்டும் என நீயும்

nalla irukuda intha lines

logu.. said...

aaga..
thnks..

nallaruntha antha linesa kattikka.

Unknown said...

மொத்தக் கவிதையுமே அழகான சோகம்... பிரிவின் வலி.. ரொம்ப சூப்பர்.. :))

logu.. said...

// ஸ்ரீமதி கூறியது...
மொத்தக் கவிதையுமே அழகான சோகம்... பிரிவின் வலி.. ரொம்ப சூப்பர்.. :))//

Hayyo.. kavithaayini
sonna saariyathaanirukkum.
thnksnga varukaikkum vazhthirkkum.

logu.. said...

gayooo.. enga
romba naala aala kanom?

gayathri said...

logu.. கூறியது...
gayooo.. enga
romba naala aala kanom


ithelam rompa over neenga kavithai pottan naan than first commetn sollren enna poi rompa nalla aala kanomnu solrenga

து. பவனேஸ்வரி said...

பிரிவின் வலி கவிதையில் தெரிகிறது...மனசு வலிக்கிறது!

gayathri said...

து. பவனேஸ்வரி கூறியது...
பிரிவின் வலி கவிதையில் தெரிகிறது...மனசு வலிக்கிறது!

ithem summa pa neenga kasta padathenga ok.

venumna neega loguva kelunga avarum itha than solluvaru