Aug 31, 2013

காதல் சேர்த்து வைத்து..!


இத்தனை வயசாகியும்
இப்போதும் சின்னக்குழந்தையாய்
உண்டியலில் காசு போட்டு வைக்கும்
பழக்கம் உனக்கு.
ஏன் எனகேட்க
ஒருநாளைக்கு யாருக்கேனும்
உதவுமே என்பாய்.
உடனே மண்டியிட்டு
கத்தத்தோன்றும் எனக்கு.
நீ காசு சேர்த்து வைப்பதைப்போல்
நான் காதல் சேர்த்து வைத்திருக்கிறேனடி
உனக்கு மட்டுமே செலவழிக்க வேண்டுமென்று!
********************************
ப்ப்ரியமுடன்..
லோகநாதன்.

5 comments:

சுசி said...

நல்லா எழுதி இருக்கிங்க :)

logu.. said...

:) நன்றி சுசி..!

gayathri said...

நீ காசு சேர்த்து வைப்பதைப்போல்
நான் காதல் சேர்த்து வைத்திருக்கிறேனடி
உனக்கு மட்டுமே செலவழிக்க வேண்டுமென்று!

naanum thaan

gayathri said...

sir konjam adikadi intha pakkam etti parunga.

inum ungala marakama naanga irukom inga

logu.. said...

வந்துட்டா பொகுது காயத்திரி..!