Jul 6, 2013

நிலவு நீ..!


விடாது கொட்டித்தீர்த்த பின்பும்
தூறிக்கொண்டிருக்கும் தூவானமாய்..

ஓயாமல் அழுதுமுடித்த பின்பும்
விசும்பிக்கொண்டிருக்கும் மனசு!
***************************************************


சந்தோஷம்..
புன்னகை..
கோபம்..கண்ணீர்..
வலி.. தாபம்..
பிரிவு..
இப்படி ஏதேனும்
ஒன்றை கொடுத்து
கொண்டே இரு.
உன்னிடமிருந்து
ஏதேனும் ஒன்று 
பெற்றுக்கொண்டே
இருக்கவேண்டும்

இந்த காதலுக்கு!
**************************************

‘இனி சொல்ல ஒன்னுமில்ல’
எனும் வார்த்தைக்குள்
உற்று கவனித்தால்
ஒருவேளை தெரியக்கூடும்..

கடலளவு ப்ரியங்கள்!
*******************************************

உன் முத்தங்களின்
ஞாபகம் தீண்டும்போதெல்லாம்
எனக்கு சிறுவயதில்
சாப்பிட்ட நிலாச்சோறு
ஞாபகம் வரும்.
பூமிக்கு நிலவு..

எனக்கு நீ!
********************************************************
ப்ரியமுடன்..
லோகநாதன்.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சிறு வயது ஞாபகம் வந்தது உட்பட அனைத்தும் அருமை... தொடர வாழ்த்துக்கள்...

Harini Resh said...

அருமை வாழ்த்துக்கள்...