Feb 16, 2011

நினைவெனும் மந்திரங்கள்.

நட்போ.. காதலோ..
பிரிந்து செல்லும்போது
எடுத்து செல்ல
தெரிவதில்லை ஒருபோதும்.
.
வேரூன்றாமல் வளர்ந்து
நீரூற்றாமல் பூக்கும்
பூக்களவை.
.
சமயங்களில்
உற்சாக பேரூற்றாய்
உயிரோடு பொங்கும்.
சந்தர்ப்பங்களில்
கொடிய விஷமாய்
மனதோடு ஏங்கும்.
.
வேண்டாம் என்று
தள்ளி வைத்தாலும்
சுயங்கள் திருடும் கலையை
இயல்பாய் கற்று வைத்திருக்கின்றன.
.
எதிர்வரும் இயல்பான
முகத்திலோ அல்லது
எதிர்பாரா ஒரு சில
செயல்களிலோ சட்டென்று
ஒட்டிக்கொ(ல்)ள்ளும்.
.
நட்போ.. காதலோ..
பிரிந்து செல்லும்போது
எடுத்து செல்ல
தெரிவதில்லை ஒருபோதும்.
நினைவென்னும் மந்திரங்களை.
*******************************
ப்ரியமுடன்..
லோகநாதன்.

16 comments:

Unknown said...

கவிதை அருமை

Anonymous said...

//நட்போ.. காதலோ..//

இரண்டு பிரிவும் உணர்வை பொறுத்தவரை வலி கொண்டவை...

logu.. said...

Nanringa JJ.

logu.. said...

Unmaithanga Tamil.

சுசி said...

வலிக்க்க்கும்ம்ம்..

அருமையா இருக்கு கவிதை.

sakthi said...

வாவ் அருமையான கவிதை

sakthi said...

நெகிழ வைக்கும் வரிகள்

logu.. said...

nanringa susi..

logu.. said...

Sakthi..

Romba nala kanom.. vango..vango...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

அருமையான வரிகளுடனான கவிதை லோகு
பிரவு என்பது வலிகள் நிறைந்தவை..

ஹேமா said...

நட்பும் காதலும் உயிர்கொல்லி நோய்போல.இருந்தாலும் உயிர் எடுக்கும்.பிரிந்தாலும் உயிர் எடுக்கும் !

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//பிரிந்து செல்லும்போது
எடுத்து செல்ல
தெரிவதில்லை ஒருபோதும்.
நினைவென்னும் மந்திரங்களை//

Lovely lines...too good..:)

gayathri said...

பிரிந்து செல்லும்போது
எடுத்து செல்ல
தெரிவதில்லை ஒருபோதும்.
நினைவென்னும் மந்திரங்களை

logu.. said...

Nanringa..

Thozhi Prasha..
Hema..
Appavi..
Gayathri..

எவனோ ஒருவன் said...

////நட்போ.. காதலோ..பிரிந்து செல்லும்போது எடுத்து செல்ல தெரிவதில்லை ஒருபோதும்..////

நல்லா இருக்கு லோகு

logu.. said...

vanga bossuuuu...