Feb 22, 2011

மடி சாயும் வரம்..

உன் கைவளைகள் சொல்லவில்லையா
மனதோடு என் பெயரை..
தினம் கண்மூடும் நேரங்கள் சொல்லவில்லையா
கனவோடு என் நேசங்களை..
அஞ்சாறு நிலவுகள் சேர்த்தே அழகாக செய்தானம்மா
ஒரு நூறு மீனாட்சி பார்க்கின்றேன் உன் முகத்தில்.
நீ பொட்டு வைக்கும்போதெல்லாம்
சொல்லியிருக்குமே உன் வீட்டு கண்ணாடி
அது பொட்டல்ல என் உயிரென்று..
அள்ளி பூச்சூடும் போதெல்லாம்
சொல்லியிருக்குமே அதன் வாசங்கள்..
அது வாசமல்ல என் நேசம் என்று..
தங்க மீன் செய்து வளர்த்தாலும்
அது மிரட்டும் முட்ட கண்ணை போலாகுமா?
வெள்ளி மலரொன்றை பரிசாக பெற்றாலும்
அது ரசிக்கும் உன் புன்னகை போலாகுமா?
வரங்கள் அள்ளி கொடுத்தாலும் வேண்டாமேன்பேன்
உன் மடி சாயும் நிமிடங்கள் போதுமேன்பேன்.
**********************************************
ப்ரியமுடன்
லோகநாதன்.

12 comments:

ரேவா said...

வரங்கள் அள்ளி கொடுத்தாலும் வேண்டாமேன்பேன்
உன் மடி சாயும் நிமிடங்கள் போதுமேன்பேன்.


superb nanbaa

எவனோ ஒருவன் said...

////வரங்கள் அள்ளி கொடுத்தாலும் வேண்டாமேன்பேன்
உன் மடி சாயும் நிமிடங்கள் போதுமேன்பேன்.////

மிக அருமை நண்பா. பாராட்ட வார்த்தைகள் இல்லை :-)

karthikkumar said...

nice feel :)) valakkam pola kalakkal maams ....

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

அனுபவிச்சு எழுதியிருக்கிறிங்கள் லோகு சூப்பர்.

logu.. said...

Nanringa Reva..

logu.. said...

Vanga Bossuu..
Nanri.

logu.. said...

Mamu Soukiyama?

logu.. said...

\\அனுபவிச்சு எழுதியிருக்கிறிங்கள் லோகு சூப்பர்.\\

Hihihi..

அஞ்சா சிங்கம் said...

ரோம்ப பீல் பண்ண வச்சிடீங்க ............

vinu said...

nalllaaaaaaaaaa irrukungoooooooow

logu.. said...

பரவால்ல விடுங்க பாஸு..

நம்மட்ட சந்தொஷத்துகா பஞ்சம்..

logu.. said...

ஹி..ஹி.. நன்றிங்க வினு.