Feb 13, 2011

பொருளற்ற கவிதைகள்..

என்னதான் அழகாய் இருந்தாலும்
ரசிக்கப்படாமல்
கிழித்தோ அல்லது கசக்கியோ
எறியப்படும் யாரோ ஒருவரால்..
பொருளற்ற கவிதைகள்.
ம்ம்.. கவிதையும் காதலும் வேறல்ல.
***************************************
கொஞ்சி கொஞ்சி
கரைதிருக்கலாம்தன்..
வெட்கம் என்றால்..
வெறுப்புகளை என்ன செய்ய?
**********************************
நீரை சுமக்கும் மேகங்கள்
பாரத்தை அவ்வப்போது
இறக்கி வைத்து கொள்கின்றன
மழையாய்..
உன் நினைவை சுமக்கும்
இதயம் என்ன செய்யும்..
கண்ணீரும் இல்லை என்னிடம்.
************************************
உன் வருகைகளுக்கான
அதீத எதிர்பார்புகள் இல்லாத நான்..
உன் வார்த்தைகளுக்கான
மயக்கம் இல்லாத நான்..
உன் சந்தோஷங்களுக்கான
தேடல் இல்லாத நான்..
நூலறுந்த பட்டத்தை
உற்று கவனிக்க தோன்றுகிறது எனக்கு .
********************************
ப்ரியமுடன்..
லோகநாதன்.

11 comments:

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

"சுமக்கும் மேகங்கள் பாரத்தை அவ்வப்போது இறக்கி வைத்து கொள்கின்றன மழையாய்..உன் நினைவை சுமக்கும் இதயம் என்ன செய்யும்..கண்ணீரும் இல்லை என்னிடம்."

நல்லாயிருக்கு லோகு...

karthikkumar said...

:))

Anonymous said...

//நீரை சுமக்கும் மேகங்கள்
பாரத்தை அவ்வப்போது
இறக்கி வைத்து கொள்கின்றன
மழையாய்..
உன் நினைவை சுமக்கும்
இதயம் என்ன செய்யும்..
கண்ணீரும் இல்லை என்னிடம்.//

//என்னதான் அழகாய் இருந்தாலும் ரசிக்கப்படாமல் கிழித்தோ அல்லது கசக்கியோ எறியப்படும் யாரோ ஒருவரால்.. பொருளற்ற கவிதைகள். ம்ம்.. கவிதையும் காதலும் வேறல்ல.//

என்னால் சொல்லப்படாத வரிகள் நீ சொல்லும் போது உணரமுடிகிறது லோகு..

gayathri said...

நீரை சுமக்கும் மேகங்கள்
பாரத்தை அவ்வப்போது
இறக்கி வைத்து கொள்கின்றன
மழையாய்..
உன் நினைவை சுமக்கும்
இதயம் என்ன செய்யும்..
கண்ணீரும் இல்லை என்னிடம்.

Anonymous said...

பிடித்த, குறிப்பிட்ட வரிகளை மட்டும் copy செய்து paste பண்ணலாம் என்றால் முழு கவிதையையும் தான் போட வேண்டும்.
அனைத்துமே அருமையான வலி மிகுந்த வரிகள்.

logu.. said...

Nanringa thozhi prasha..

logu.. said...

bossu... vangovv..

logu.. said...

\\என்னால் சொல்லப்படாத வரிகள் நீ சொல்லும் போது உணரமுடிகிறது லோகு..\\

ennamo agiduchungov ungalukku.

logu.. said...

Nanringa Gayathri, Indira..

ஹேமா said...

லோகு...சந்தோஷமாயிருங்க.
காதலர்தின வாழ்த்துகள்.மூன்று கவிதைகளும் கண்ணீர் வற்றிய வார்த்தைகள் !

எவனோ ஒருவன் said...

////நீரை சுமக்கும் மேகங்கள்
பாரத்தை அவ்வப்போது
இறக்கி வைத்து கொள்கின்றன
மழையாய்..
உன் நினைவை சுமக்கும்
இதயம் என்ன செய்யும்..
கண்ணீரும் இல்லை என்னிடம்.////

:-(

இக்கவிதையை பற்றி கருத்து சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை லோகு. வலிமிக்க வரிகள்....