Jan 22, 2011

அடி கிறுக்குபுள்ள..




கடலலையில் கால் நனைத்து சந்தோசமாய் விளையடிகொண்டிருந்தாய்..
அலைகளும் உன் கால் நனைக்கும் சந்தோசத்தில் துள்ளித்துள்ளி வந்துகொண்டிருந்தன கரைக்கு.
"ஏய்.. எனக்கொரு சந்தேகமடி.."
"என்ன?" விளையாடிகொண்டே கேட்டாய்.
" நீ மட்டும்தான் இப்டி கிறுக்கியாட்டம் இருக்கியா ..
இல்ல உங்க வீட்ல எல்லோரும் இப்டிதனா?"
"என்ன வம்புக்கு இழுக்காத .. கோவம் வரும்.."
"உண்மையத்தானே கேட்டேன்?"
"டேய்.. யார் கிறுக்கி? நீதாண்டா கிறுக்கு பையன்.."
"நான் கிறுக்கனா? சரி விடு..
எங்க ஊர்ல கிறுக்கு பசங்களெல்லாம்
என்ன பண்ணுவாங்க தெரியுமா?"
"என்ன பண்ணுவாங்களாம்?"
"அப்டியே கட்டிப்பு.."
சொல்லி முடிப்பதற்குள் தர ஆரம்பித்துவிட்டாய்.
முத்தங்கள் எனும் பெயரில் வரங்களை.
*********************************************



"சீய்.. போடா .. நீ ரொம்ப மோசம்.." என்கிறாய்.
அப்படி என்ன சொல்லிவிட்டேன் நான்?
சாயங்காலம் ஆகிவிட்டதென்றாய்.
நானோ இல்லை இல்லை உன் மடி சாயும் காலம்
ஆகிவிட்டதென்றேன்.
இதற்காகவா இந்த மோசக்காரன் பட்டம்?
ஹய்யோடி.. பொல்லாதவர்கள்... இந்த காதலிகள்.
**********************************************************
ப்ரியமுடன்..
லோகநாதன்.

10 comments:

karthikkumar said...

அருமைங்க நல்ல love feel :)

karthikkumar said...

ஹய்யோடி.. பொல்லாதவர்கள்... இந்த காதலிகள்.///
இந்த பொம்பளைங்களே இப்படிதான்...:) குத்துங்க எசமா குத்துங்க

எவனோ ஒருவன் said...

'சாயங்காலம்' - அகராதியில் இதன் பொருளை மாற்றி விடச் சொல்லலாம் போலிருக்கே :-)

ஹேமா said...

லோகு...நீங்க கிறுக்குப் பையனா !

ரேவா said...

பொல்லாதவர்கள்... இந்த காதலிகள்....நல்ல இருக்கு நண்பா... சகோ கார்த்தியின் பின்னூட்டம் சூப்பர்... ஹ் ஹா..

logu.. said...

\\இந்த பொம்பளைங்களே இப்படிதான்...:) \\

Amanga rommbba mosamnga..

logu.. said...

\\ எவனோ ஒருவன் said...
'சாயங்காலம்' - அகராதியில் இதன் பொருளை மாற்றி விடச் சொல்லலாம் போலிருக்கே :-)\\

hihi
neenga sonna sarithan..

logu.. said...

\\ ஹேமா said...
லோகு...நீங்க கிறுக்குப் பையனா !\\

Nanga rommba periya arivaliyakkum.

logu.. said...

\\ ரேவா said...
பொல்லாதவர்கள்... இந்த காதலிகள்....நல்ல இருக்கு நண்பா... சகோ கார்த்தியின் பின்னூட்டம் சூப்பர்... ஹ் ஹா..\\

Hihi

Nangalum sirippamla..

gayathri said...

அப்டியே கட்டிப்பு.."
சொல்லி முடிப்பதற்குள் தர ஆரம்பித்துவிட்டாய்.
முத்தங்கள் எனும் பெயரில் வரங்களை.



----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------...................................................................................................................