Jun 16, 2010

நேசம்..

காலங்கள் மாறிவிட்டன..
கனவுகளும் கரைந்துவிட்டன..
காயங்கள் மட்டும்
இன்னும் ஆறாமல் அப்படியே..


தனிமையில் நெஞ்சம்
தறிகெட்டு ஓடுது..
நினைவுகளின் பிடியில்
சருகாய் ஆகுது.


சுடும் நெருப்பென்று
தெரியாமல்
சுகமளிக்கும் பனிதுளிஎன்று
சேர்த்துவைத்துவிட்டேன் உன்
புன்னகைகளை என்னிதயத்தில்..

எரியும் நிலவென்று
தெரியாமல்
சிரிக்கும் பூவென்று நினைத்து
பதித்துவைத்துவிட்டேன்
என் கண்களில் உன் முகத்தை..

முட்களோடுதான் வாழ்க்கை
என தெரிந்தும் சிரித்துக்கொண்டே
மலர்ந்திருக்கும் ரோஜாவை
போல்தான் நானும்..

ம்ம்.. ஆண்டாண்டு காலம்
கடந்தாலும் உனக்கான என்
பிரியங்களை ஒருபோதும்
உணரபோவதில்லை நீ..

என் காலம் உள்ள
காலம் வரை உன் மீதான
என் பிரியங்களும் கரையப்போவதில்லை...
.......................................................................
ப்ரியமுடன்..
லோகநாதன்.

2 comments:

நட்புடன் ஜமால் said...

பிரியங்கள் ஏன் கரையனும்

gayathri said...

ம்ம்.. ஆண்டாண்டு காலம்
கடந்தாலும் உனக்கான என்
பிரியங்களை ஒருபோதும்
உணரபோவதில்லை நீ..


enna solrathunu theriyalai .

nalla iruku

innum neraya kavithai ezuthuga pa