Mar 7, 2009

செ ல் ல ம் மா . .

இப்போதெல்லாம்
கோவிலுக்கு சென்றால்
உன்னைவிட
எனக்காக அதிகம்
வேண்டிக்கொள்கிறேன்.
கடவுளைவிட
என் காதல்மேல்
நம்பிக்கை அதிகம் எனக்கு.
அது உன்னை நன்றாக
பார்த்துகொள்ளும் என்று.
.........................................................
எதற்கும் தயங்காமல்
அவ்வப்போது கொட்டி
தீர்த்துவிடும்
மழையை போல்தான்..
சமயங்களில்
என்னை
திணற திணற
நனைத்துவிடுகிறது..
உன் காதல்.
.................................................
எனக்கு தெரிந்து
எந்த பூவும்
அருகில் சென்றாலே
முகம் சிவப்பதில்லை..
உன்னை தவிர.
...............................................
நீ செல்லம் கொஞ்சும்
அழகிற்காகவே
இன்னும்
குழந்தையாகவே
இருக்கிறது
என் காதல்.
............................................
ஆசை பட்டு
கேக்குது மழைச்சாரல்..
குடை இல்லாமல்
வா வெளியே..
வெட்கம் விட்டு
கேக்குது பூந்தோட்டம்..
ஒரு புன்னகை
தந்துவிட்டு போ பெண்ணே..
நெஞ்சம் தொட்டு
கேக்குது என் காதல்..
முத்தமொன்னு
வச்சுவிட்டு போ உயிரே.
........................................................
ப் ரி ய மு ட ன் . .
லோ க நா த ன் . .






10 comments:

நட்புடன் ஜமால் said...

\\எனக்கு தெரிந்து
எந்த பூவும்
அருகில் சென்றாலே
முகம் சிவப்பதில்லை..
உன்னை தவிர.\\

மிக அழகு லோகு ...

அப்துல்மாலிக் said...

வரிகள் ஒவ்வொன்றுன் காதல் மொழிபேசுது

நல்லாயிருக்கு அனைத்துவரிகள்

gayathri said...

ella varikalum nalla iruku pa.

து. பவனேஸ்வரி said...

அழகான வரிகள்... ஒவ்வொரு வரியிலும் காதல் சொட்டுகிறது.

logu.. said...

\\ நட்புடன் ஜமால் கூறியது...
\\எனக்கு தெரிந்து
எந்த பூவும்
அருகில் சென்றாலே
முகம் சிவப்பதில்லை..
உன்னை தவிர.\\

மிக அழகு லோகு ..\\

Hayyo.. thanksnga.

logu.. said...

\\ அபுஅஃப்ஸர் கூறியது...
வரிகள் ஒவ்வொன்றுன் காதல் மொழிபேசுது

நல்லாயிருக்கு அனைத்துவரிகள்\\

Thank u.

logu.. said...

\\ gayathri கூறியது...
ella varikalum nalla iruku pa\\

Appadiya?

logu.. said...

\\ து. பவனேஸ்வரி கூறியது...
அழகான வரிகள்... ஒவ்வொரு வரியிலும் காதல் சொட்டுகிறது\\

Nanringa..
varugaikum vazhthirkum.

மேவி... said...

sema feelings ah irukkuppa

logu.. said...

\\sema feelings ah irukkuppa\\

Nanringa..
Muthal varugaikum..
vazhthirkum.