பூக்கள்னாலே 
 மயங்கிடுவாங்களாமே
 நிஜமா?”
“ம்ம்... ஆமா..”
“ஏன் அப்படி?”
”அது அப்படிதான்..”
“ம்ம்..சரி விடு.. இனிமேல்
 நீ கோவபட்டா நானும் 
 பூ வாங்கி குடுத்து சமாளிக்கிறேன்..”
“ஹா..ஹா.. 
  அப்படி எத்தன நாளைக்கு சாமாளிப்ப?”
“அட.. அப்போ உன்ன பூந்தோட்டம்..
 இல்ல..இல்ல.. பூக்காட்டில்
 வீடு கட்டி குடி வச்சிடுவேனே..”
“ம்ம்.. அப்படியா? 
  அதுக்கும் அசரலேன்னா 
  என்ன பண்ணுவ?”
“விடு..விடு.. அதுகெல்லாம்
  ஐயா கிட்ட ஐடியா இருக்குடி..”
“என்னடா அது சொல்லுடா..”
“அதெல்லா சொல்ல முடியாதுடி..”
“ சொல்லலேன்னா எனக்கு
 கெட்ட கோவம் வரும்டா..”
“ஹா..ஹா.. இந்த மாதிரி கோவப்படுற
 பொண்ணுங்களை சமாளிக்கதானே
 அந்த நான்கெழுத்து மந்திர சொல்லை
 கண்டுபுடிச்சு வச்சிருக்கோம் பசங்க..
 நீ வேணும்னா இப்பவே 
கோபப்பட்டு பாரேன்..
 அடுத்த நிமிடமே
 ச்ச்சீய்..போடா..உதடு வலிக்கிறதென்பாய்.”
********************************************
ப்ரியமுடன்..
லோகநாதன்.
 
 
 

