Sep 7, 2009

என் காதல்..

நட்சத்திரங்களுடன்
கைகோர்த்து
முப்பத்து முக்கோடி
தேவர்கள் அண்ட் தேவதைகள்
சுகந்தம் பாட..
நகரும் நிமிடங்களோடு
கைகோர்த்து
பூக்களும் தோரணங்களும்
கவிதை பாட..
இதழ் நிறைய புன்னகை
சிந்தும் உறவுகளும்..
மனம் நிறைய வாழ்த்துகள்
சொல்லும் உள்ளங்களும்
நிறைந்திருக்க..
உன் கரம் பிடிக்கும்
அந்நாள்..

இனி வரப்போவதில்லை
என தெரிந்திருந்தும்..
கனவில் தினமும்
நினைத்து தொலைக்கிறது.
என் காதல்.
.................................................
ப்ரியமுடன்..
லோகநாதன்.

6 comments:

S.A. நவாஸுதீன் said...

இனி வரப்போவதில்லை
என தெரிந்திருந்தும்..
கனவில் தினமும்
நினைத்து தொலைக்கிறது.
என் காதல்.
**********************
வந்து தொலைக்கிறது என்று இருந்தால் வாசிக்க இன்னும் கொஞ்சம் நல்லா இருக்குமோ!!

ivingobi said...

இதழ் நிறைய புன்னகை
சிந்தும் உறவுகளும்..
மனம் நிறைய வாழ்த்துகள்
சொல்லும் உள்ளங்களும்
நிறைந்திருக்க..
உன் கரம் பிடிக்கும்
அந்நாள்..
ithu thaanae kaadhalargalin kanavu.......

அப்துல்மாலிக் said...

//உன் கரம் பிடிக்கும்
அந்நாள்..
//

"உன் கரம் பிடித்த அந்த நாள்" இப்படி இருந்தால் நல்லாயிருக்குமோ

நல்லாயிருக்கு உங்க கனவு லோகு

ப்ரியமுடன் வசந்த் said...

//இனி வரப்போவதில்லை
என தெரிந்திருந்தும்..//

அச்சச்சோ.....

நட்புடன் ஜமால் said...

காதலிப்பெதெல்லாம் கிடைத்து விடுவதில்லை.

கிடைத்ததை காதலித்தேயாகவேண்டும்.

kavitha said...

போ லோகு... உன்னோட கவிதைகளை படிக்க முடியவில்லை ... இதயத்தை ஈர்த்து, நனைத்து, போகிறது வார்த்தைகளும், வரிகளும்.

மனம் நிறைந்திருக்கிறது லோகு. ரொம்ப சுவை, அருமை, அருமை