இல்லையென உணரும்போது
கடந்துசென்ற நமக்கான
நேரங்கலனைத்தையும் மிகச்சிறப்பாய்
உணர்கிறது மனசு..
நமக்கான நேரங்களனைத்தும்
பெரும்பாலும் சண்டைகளாகவே
முடிந்திருந்தாலும்.
------------------------------------------------------------------
------------------------------------------------------------------
வருகின்றன மழை நாட்கள்..
கொஞ்சம் கவிதைகளையும்
நிறைய்ய நினைவுகளையும்
தாங்கிக்கொண்டு..
மனசில் மட்டும் ஏனோ
மனசில் மட்டும் ஏனோ
சந்தோசங்களுக்கு பதிலாய் வலிகள்.
-------------------------------------------------------------உதிர்ந்துவிட்ட வார்த்தைகளை
போல்தான் சில உறவுகளும்..
எவ்வளவுதான் தவமிருந்தாலும்
கைசேருவதே இல்லை
கடைசீவரை..
---------------------------------------------------
அடர்தனிமைகளில் பயணம் செய்யவே
நடுங்குகிறது மனசு.. வழியெங்கும்
உயிரை கொல்லும் உன் நினைவுகளும்
சுயங்கள் திருடும் உன் பிம்பங்களும்
மட்டுமே சிதறி கிடக்கின்றன.
.................................................................................
ப்ரியமுடன்...
லோகநாதன்.